தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சிரஞ்சீவி, விஜயசாந்தியைத் தொடர்ந்து பவன் கல்யாணும் சமீபத்தில்தான் முழுநேர அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்தார். அவர்களைத் தொடர்ந்து ரஜினியும் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், தற்போது கன்னட நடிகர் உபேந்திராவும் புதிய கட்சி தொடங்கயிருப்பதாக அறிவித்துள்ளார்.
கன்னடத்தில் ஏராளமான படங்களில் நடித்தவர் உபேந்திரா. தமிழில் விஷால் நடித்த சத்யம் படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் அவர் நடித்திருந்தார். தற்போது கன்னடத்தில் உப்பி ருப்பி -என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில்தான், கர்நாடகத்தில் வரப்போகிற சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக தனி கட்சி தொடங்கயிருப்பதாக அறிவித்துள்ளார் உபேந்திரா. மேலும், எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் தனித்து போட்டியிட்டு பலப்பரீட்சை காணப் போகிறாராம்.
இந்த தகவல் தற்போது ஒரு வீடியோவாக வெளியிட்டுள்ள உபேந்திரா, தன்னை மக்கள் தேர்ந்தெடுத்தால் ஊழலை ஒழிப்பதுதான் எனது முதல்வேலை என்றும் தெரிவித்துள்ளார்.