இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க தயாரிப்பாளர்களில் ஜேஎஸ்கே எனும் ஜே சதீஷ்குமாரும் ஒருவர். இரண்டு முறை தேசிய விருதுகளைப் பெற்ற தயாரிப்பாளர் இவர். ராம் இதற்கு முன் இயக்கி தேசிய விருதுகளை அள்ளிய தங்க மீன்கள் இவரது தயாரிப்பு தான். இப்போது இவர் மீண்டும் ராம் உடன் இணைந்து வெளியாகியுள்ள படம் தான் தரமணி. தயாரிப்பாளராக மட்டுமல்லாது இந்தப் படத்தில் ஜேஎஸ்கே ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தும் உள்ளார். தரமணி படத்தில் காவல் துறை கமிஷனராக வருபவர் இவர் தான்.
தயாரிப்பாளர், திடீர் நடிகரானது குறித்து ஜேஎஸ்கே கூறுகையில், "இந்தக் கேரக்டருக்கு முதலில் நிறைய நடிகர்களை வரவழைத்துப் பார்த்தார் ராம். அவருக்கு திருப்தியில்லை. கடைசியில் என்னையே நடிக்கச் சொல்லிவிட்டார். எனக்கு புதுமுகமா இருந்தா இன்னும் பெட்டர்... தெரிந்த முகமாக இருந்தால் அவர் மீது கதை செல்வதாக பார்வையாளர்கள் யூகிப்பார்கள். புதுமுகம் என்றால் அதற்கு வாய்ப்பில்லை என்றார். இருந்தாலும் தயக்கத்துடன்தான் ஒப்புக் கொண்டேன். இந்தப் பாத்திரத்துக்காக நான் எந்த முன் தயாரிப்பும் செய்யவில்லை. யாரைப் பார்த்தும் ஒத்திகை செய்யவில்லை" என்றார்.
சமீபகாலமாக இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், தயாரிப்பாளர்கள் எல்லாம் நடிகராகும் போது நாளை இவரும் ஹீரோவாக வந்தாலும் ஆச்சர்யமில்லை.