'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
போக்குவரத்து இடையூறாக இருப்பதாக கூறி அகற்றப்பட்ட சிவாஜி சிலையை, மீண்டும் சென்னை கடற்கரை சாலையிலேயே நிறுவ வேண்டும் என முதல்வருக்கு தமிழ் திரையுலகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
சிவாஜி சிலை விவகாரம் தொடர்பான கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் விக்ரமன், ஆர்கே செல்வமணி, சீமான் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சிவாஜியை சிலையை கடற்கரை சாலையில் வைக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. இதுகுறித்து முதல்வர் பழனிசாமிக்கு திரையுலகம் சார்பில் விடுத்துள்ள வேண்டுகோளின் விபரம் வருமாறு....
சிவாஜி கணேசன், தமிழனாகப் பிறந்தது தமிழர்களாகிய நாம் பெற்ற பேறு. இந்திய சினிமாவை முதன் முதலில் உலகத்தரத்திற்கு எடுத்துச் சென்ற நடிகர். இயக்குநர் ராஜ்கபூர், சிவாஜியின் முகலட்சணம் நடிப்புக் கலைக்காகவே வடிவமைக்கப்பட்டது என்றார். அமிதாப் பச்சன் சிவாஜியின் பாதம் தொட்டு ஆசீர்வாதம் பெற்றார். நடிப்பில் ஆல் ரவுண்டர் திலீப் குமார், நடிப்பில் சிவாஜிக்கு நிகர் கலையுலகில் எவருமில்லை என்று பாராட்டினார். அமெரிக்காவின் முன்னணி நடிகர் மார்லின் பிராண்டோ, சிவாஜி கணேசன் நடிப்பிற்கு இலக்கணம் படைத்தவர் என்று புகழாரம் சூட்டினார்.
சிவாஜி கணேசன் திரைப்படங்களில் பேசிய தமிழ், உலக மக்களிடம் தமிழ் மொழியின் வளமையை எடுத்துச் சென்றது. தமிழர் வாழ்வியல் கருத்துக்களையும், தமிழ் நாகரிகத்தையும், பண்பாட்டையும் எடுத்துக்காட்டியது. சாதனை புரிந்தவராக ஊடகங்களில் நம் தாய்த்தமிழுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அதனால், வங்கக் கடற்கரையில் உலவும் தமிழ்த்தென்றல் அவரது சிலையைத் தழுவியபடி அவரை பாராட்டிக் கொண்டேயிருக்க வேண்டும் என்பது தமிழ்ப் படைப்பாளிகளாகிய எங்களது ஆவல் மட்டுமல்ல, ஒட்டு மொத்த தமிழ் மக்களின் ஆவலும் கூட.
எனவே, நடிகர் திலகம் அவர்களின் சிலையை மெரினா கடற்கரைச் சாலையிலேயே நல்லதொரு இடத்தை தேர்ந்தெடுத்து நீங்கள் நிறுவிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம். இதையே உலகத்தமிழர்களின் கோரிக்கையாகக் கருதி நீங்கள் நிறைவேற்றி வைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.