ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு |
ஓவியா கடந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பின் நிகழ்ச்சி மீதான நம்பகத் தன்மை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. இந்த வாரத்தில் வைக்கப்பட்ட 'டாஸ்க்'குகள் மற்றும் அதற்காக அணிகளைப் பிரித்த விதம் ஆகியவற்றைப் பார்க்கும் போது அனைத்துமே திட்டமிடப்பட்டு, எழுதப்பட்டு, செயல்படுத்தப்படுகிறதோ என்ற சந்தேகம் அதிகரிக்கிறது.
இந்த வாரம் முழுவதும் நிகழ்ச்சியில் பெரிய சுவாரசியம் எதுவும் இல்லாமல் சாதாரணமாகவே போனது. ரசிகர்களைக் கவர்ந்த ஓவியா இல்லாதது, ரசிகர்களின் வெறுப்புக்கு ஆளான ஜுலி இல்லாதது ஆகியவை நிகழ்ச்சியில் நன்றாக எதிரொலித்தது. ரைசா மட்டும் திடீரென நல்லவராக மாறியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மற்றவர்களின் கேரக்டர்களில் எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியேதான் தொடர்கிறார்கள்.
நேற்று பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு திடீரென ஒரு டாஸ்க்கைக் கொடுத்தார். ஒவ்வொரு போட்டியாளர்களிடமும் ஐந்து கேள்விகள் கேட்கப்பட்டு யார் அதிக பதில்களைச் சொல்கிறார்களோ அவர்களுக்கு எதிர்பாராத ஒன்று காத்திருக்கிறது என்று அறிவித்தார். அதன்படி இத்தனை நாட்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடந்தவைகள் அனைவரிடமும் கேள்விகளாகக் கேட்கப்பட்டன.
ஐந்து கேள்விகளுக்கும் சரியான பதிலை சொன்னவர் காயத்ரி மட்டுமே. முடிவுகளை அறிவித்த பிக் பாஸ், சரியான பதில்களைச் சொன்ன காயத்ரி, இந்த வார எவிக்ஷனிலிருந்து காப்பாற்றப்படுகிறார் என்று சொன்னது நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்தது.
இந்த வார எவிக்ஷன் வாக்களிப்பில் ரைசா தவிர மற்ற அனைவருமே இருந்தார்கள். காயத்ரிக்கும், சக்திக்கும்தான் மிகவும் குறைவான வாக்குகள் விழுந்ததாகச் சொல்லப்படுகிறது. காயத்ரி இருந்தால்தான் நிகழ்ச்சியில் ஏதாவது, சண்டை, சச்சரவு வரும் என்று கருதிய பிக் பாஸ் நிகழ்ச்சியாளர்கள் காயத்ரிக்கு சொல்லிக் கொடுத்து அவரைக் காப்பாற்றியதாக சமூக வலைத்தளங்களில் குற்றம் சாட்டி வருகிறார்கள்.
மக்களின் வாக்களிப்புக்கு எதிராக பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்திக் கொண்டு செல்கிறார்கள் என்றும் கமெண்ட்டுகள் அதிகம் வருகின்றன. பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பார்ப்பதை நிறுத்துவதோடு, இனி வாக்களிப்பதிலும் கலந்து கொள்ளக் கூடாது என பலரும் சொல்லி வருகிறார்கள்.
இன்று, சனிக் கிழமை என்பதால் கமல்ஹாசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவார். தன்னை மக்களின் பிரதிநிதி என நிகழ்ச்சியில் சொல்லிக் கொள்ளும் அவர் பிக் பாஸின் மக்களுக்கு எதிரான காயத்ரியைக் காப்பாற்றும் பிக் பாஸ் முடிவுக்கு என்ன சொல்லப் போகிறார் என்று அனைவரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.