மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
தமிழில் பூ, மரியான், உத்தமவில்லன் ஆகிய படங்களில் நடித்தவர் மலையாள நடிகை பார்வதி மேனன். குறிப்பாக, பூ படத்தில் அவரது நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது. அதன்பிறகு தமிழில் பெரிய ரவுண்டு வருவார் என்ற எதிபார்க்கப்பட்ட அவர், தான் எதிர்பார்த்த மாதிரியான கதைகள் அமையாததால் மீண்டும் மலையாளத்திற்கே சென்று விட்டார்.
இந்நிலையில், தற்போது உதயநிதி ஸ்டாலினை நாயகனாக வைத்து பிரியதர்ஷன் இயக்கி வரும் பெயரிடப்படாத படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் பார்வதி மேனன். கடந்த ஆண்டு மலையாளத்தில் பகத்பாசில்-அபர்ணா முரளி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற மகேஷின்டே பிரதிகாரம் என்ற படத்தின் ரிமேக்கில் உருவாகும் இந்தபடத்தின் படப்பிடிப்பு தற்போது குற்றாலத்தில் நடந்து வருகிறது. தொடர்ந்து 40 நாட்கள் அந்த லொகேசனில் தான் படப்பிடிப்பு நடக்கிறதாம்.
இந்த படத்திலும் பூ படத்தில் நடித்தது போலவே கிராமத்து வேடத்தில் நடித்து வருகிறார் பார்வதி மேனன். தமிழைப்போலவே மலையாளத்திலும் பல படங்களில் அவர் சவாலான வேடங்களில் நடித்திருப்பதால், இந்த படத்தில் பார்வதி மேனன் கதாபாத்திரத்திற்கு கூடுதல் வலு சேர்த்திருக்கிறாராம் பிரியதர்ஷன்.