ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? | நாளைய படங்களின் வெளியீட்டில் ஒரு அபூர்வம் | மீண்டும் தமிழுக்கு வரும் சமந்தா | சித்தார்த் - அதிதி ராவ் ரகசிய திருமணம்? | சத்யா ரீமேக்கில் அசோக் செல்வன்? | முதன்முறையாக சேப்பாக்கம் மைதானத்தில் கிரிக்கெட் போட்டியை கண்டு ரசித்த சூரி | ஆடுஜீவிதம் பார்த்து பிரமித்து பாராட்டிய கமல் - மணிரத்னம் | ஏப்ரலில் வெளியாகும் ‛அரண்மனை 4' | மார்ச் 29ல் ‛ரத்னம்' இரண்டாவது பாடல் வெளியாகிறது |
தமிழில் பூ, மரியான், உத்தமவில்லன் ஆகிய படங்களில் நடித்தவர் மலையாள நடிகை பார்வதி மேனன். குறிப்பாக, பூ படத்தில் அவரது நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது. அதன்பிறகு தமிழில் பெரிய ரவுண்டு வருவார் என்ற எதிபார்க்கப்பட்ட அவர், தான் எதிர்பார்த்த மாதிரியான கதைகள் அமையாததால் மீண்டும் மலையாளத்திற்கே சென்று விட்டார்.
இந்நிலையில், தற்போது உதயநிதி ஸ்டாலினை நாயகனாக வைத்து பிரியதர்ஷன் இயக்கி வரும் பெயரிடப்படாத படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் பார்வதி மேனன். கடந்த ஆண்டு மலையாளத்தில் பகத்பாசில்-அபர்ணா முரளி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற மகேஷின்டே பிரதிகாரம் என்ற படத்தின் ரிமேக்கில் உருவாகும் இந்தபடத்தின் படப்பிடிப்பு தற்போது குற்றாலத்தில் நடந்து வருகிறது. தொடர்ந்து 40 நாட்கள் அந்த லொகேசனில் தான் படப்பிடிப்பு நடக்கிறதாம்.
இந்த படத்திலும் பூ படத்தில் நடித்தது போலவே கிராமத்து வேடத்தில் நடித்து வருகிறார் பார்வதி மேனன். தமிழைப்போலவே மலையாளத்திலும் பல படங்களில் அவர் சவாலான வேடங்களில் நடித்திருப்பதால், இந்த படத்தில் பார்வதி மேனன் கதாபாத்திரத்திற்கு கூடுதல் வலு சேர்த்திருக்கிறாராம் பிரியதர்ஷன்.