ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஆரம்பத்தில் வளர்ந்து வரும் நடிகைகளுடன் டூயட் பாடி வந்த சிவகார்த்திகேயன், மான்கராத்தேயில் ஹன்சிகாவுடன் இணைந்தார். அதையடுத்து ரஜினிமுருகன், ரெமோ படங்களில் கீர்த்தி சுரேசுடன் நடித்தவர், வேலைக்காரனில் நயன்தாராவுடன் இணைந்து விட்டார். தற்போது பொன்ராம் இயக்கும் படத்தில் படத்தில் சமந்தாவுடன் நடித்து வருகிறார்.
இதையடுத்து நேற்று இன்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் அவர் ஒரு படத்தில் நடிக்கிறார். இதையடுத்து விக்னேஷ்சிவன் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பது உறுதியாகியுள்ளது. தானா சேர்ந்த கூட்டம் வெளியானதும் சிவகார்த்திகேயன் படவேலைகளை தொடங்குகிறார் விக்னேஷ்சிவன்.
மேலும், இந்த படத்தில் நாயகியாக நடிப்பது யாராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தநிலையில், தற்போது வேலைக்காரனில் நடித்த நயன்தாராவையே மீண்டும் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடக்கிறதாம். ஏற்கனவே விக்னேஷ் சிவனின் நானும் ரெளடிதான் படத்தில் நடித்தவர் நயன்தாரா என்பதோடு அவருக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதால் சிவகார்த்திகேயன்-நயன்தாரா ஜோடி மீண்டும் இணைய அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.