விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? | அதிக எதிர்பார்ப்பில் வெளியாகும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல்! | மிஸ்டர் மனைவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தேப்ஜானி மோடக் | இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் |
ஆரம்பத்தில் வளர்ந்து வரும் நடிகைகளுடன் டூயட் பாடி வந்த சிவகார்த்திகேயன், மான்கராத்தேயில் ஹன்சிகாவுடன் இணைந்தார். அதையடுத்து ரஜினிமுருகன், ரெமோ படங்களில் கீர்த்தி சுரேசுடன் நடித்தவர், வேலைக்காரனில் நயன்தாராவுடன் இணைந்து விட்டார். தற்போது பொன்ராம் இயக்கும் படத்தில் படத்தில் சமந்தாவுடன் நடித்து வருகிறார்.
இதையடுத்து நேற்று இன்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் அவர் ஒரு படத்தில் நடிக்கிறார். இதையடுத்து விக்னேஷ்சிவன் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பது உறுதியாகியுள்ளது. தானா சேர்ந்த கூட்டம் வெளியானதும் சிவகார்த்திகேயன் படவேலைகளை தொடங்குகிறார் விக்னேஷ்சிவன்.
மேலும், இந்த படத்தில் நாயகியாக நடிப்பது யாராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தநிலையில், தற்போது வேலைக்காரனில் நடித்த நயன்தாராவையே மீண்டும் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடக்கிறதாம். ஏற்கனவே விக்னேஷ் சிவனின் நானும் ரெளடிதான் படத்தில் நடித்தவர் நயன்தாரா என்பதோடு அவருக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதால் சிவகார்த்திகேயன்-நயன்தாரா ஜோடி மீண்டும் இணைய அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.