பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ஆரம்பத்தில் வளர்ந்து வரும் நடிகைகளுடன் டூயட் பாடி வந்த சிவகார்த்திகேயன், மான்கராத்தேயில் ஹன்சிகாவுடன் இணைந்தார். அதையடுத்து ரஜினிமுருகன், ரெமோ படங்களில் கீர்த்தி சுரேசுடன் நடித்தவர், வேலைக்காரனில் நயன்தாராவுடன் இணைந்து விட்டார். தற்போது பொன்ராம் இயக்கும் படத்தில் படத்தில் சமந்தாவுடன் நடித்து வருகிறார்.
இதையடுத்து நேற்று இன்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் அவர் ஒரு படத்தில் நடிக்கிறார். இதையடுத்து விக்னேஷ்சிவன் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பது உறுதியாகியுள்ளது. தானா சேர்ந்த கூட்டம் வெளியானதும் சிவகார்த்திகேயன் படவேலைகளை தொடங்குகிறார் விக்னேஷ்சிவன்.
மேலும், இந்த படத்தில் நாயகியாக நடிப்பது யாராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தநிலையில், தற்போது வேலைக்காரனில் நடித்த நயன்தாராவையே மீண்டும் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடக்கிறதாம். ஏற்கனவே விக்னேஷ் சிவனின் நானும் ரெளடிதான் படத்தில் நடித்தவர் நயன்தாரா என்பதோடு அவருக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதால் சிவகார்த்திகேயன்-நயன்தாரா ஜோடி மீண்டும் இணைய அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.