டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
வாணி ராணி, தாமரை, தலையணை பூக்களில் நடித்துக் கொண்டிருந்த நீலிமா ராணி, குழந்தை பேறுக்காக சின்ன பிரேக் எடுத்துக் கொண்டார். தற்போது பெண் குழந்தைக்கு தாயாகி இருக்கிறார். அந்த குழந்தைக்கு அதிதி இசை என்று அழகான பெயரும் வைத்துள்ளார். இப்போது மீண்டும் நடிக்க வந்திருக்கிறார்.
முன்பு நடித்த அதே சீரியல்களில் மீண்டும் நடிக்கிறார். அதெப்படி 2 மாத இடைவெளிக்கு பிறகு அதே கேரக்டர்களில் தொடர முடியும் என்ற கேள்விக்கு சீரியலில் எல்லாமே சாத்தியம் என்பதுதான் பதில்.
தலையணைப் பூக்களில் வேலைக்கார பெண் மல்லிகாகவாக நடித்தவர். கதைப்படி அவர் சில காலம் காணாமல் போய் இப்போது 5 நட்சத்திர ஓட்டல் முதலாளியம்மாவாக திரும்புகிறார். அது எப்படி என்பது இனி வரும் எபிசோட்களில் தெரியும்.
தாமரை தொடரில் சிநேகாகவா நடித்தவர். இப்போது கவிதாவாக திரும்புகிறார். வாணி ராணியில் எரித்துக் கொல்லப்பட்ட டிம்பிளாக நடித்தவர் இப்போது மீண்டும் உயிருடன் திரும்பி வருகிறார். இப்படி நீலிமா ராணிக்காக கதையில் சில மாற்றங்களை செய்திருக்கிறார்கள். இதோடு சில புதிய சீரியல்களிலும், சில திரைப்படங்களிலும் நடிக்க இருக்கிறார்.