சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி |
வாணி ராணி, தாமரை, தலையணை பூக்களில் நடித்துக் கொண்டிருந்த நீலிமா ராணி, குழந்தை பேறுக்காக சின்ன பிரேக் எடுத்துக் கொண்டார். தற்போது பெண் குழந்தைக்கு தாயாகி இருக்கிறார். அந்த குழந்தைக்கு அதிதி இசை என்று அழகான பெயரும் வைத்துள்ளார். இப்போது மீண்டும் நடிக்க வந்திருக்கிறார்.
முன்பு நடித்த அதே சீரியல்களில் மீண்டும் நடிக்கிறார். அதெப்படி 2 மாத இடைவெளிக்கு பிறகு அதே கேரக்டர்களில் தொடர முடியும் என்ற கேள்விக்கு சீரியலில் எல்லாமே சாத்தியம் என்பதுதான் பதில்.
தலையணைப் பூக்களில் வேலைக்கார பெண் மல்லிகாகவாக நடித்தவர். கதைப்படி அவர் சில காலம் காணாமல் போய் இப்போது 5 நட்சத்திர ஓட்டல் முதலாளியம்மாவாக திரும்புகிறார். அது எப்படி என்பது இனி வரும் எபிசோட்களில் தெரியும்.
தாமரை தொடரில் சிநேகாகவா நடித்தவர். இப்போது கவிதாவாக திரும்புகிறார். வாணி ராணியில் எரித்துக் கொல்லப்பட்ட டிம்பிளாக நடித்தவர் இப்போது மீண்டும் உயிருடன் திரும்பி வருகிறார். இப்படி நீலிமா ராணிக்காக கதையில் சில மாற்றங்களை செய்திருக்கிறார்கள். இதோடு சில புதிய சீரியல்களிலும், சில திரைப்படங்களிலும் நடிக்க இருக்கிறார்.