அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி |
கீதாஞ்சலி செல்வராகவன் இயக்கிய மாலை நேரத்து மயக்கம் படத்தில் நடித்தவர் வாமிகா கபி. பாலிவுட்டிலிருந்து அவரை அழைத்து வந்தார் செல்வராகவன். மாலை நேரத்து மயக்கம் படத்தில் அவரது நடிப்பு வெகுவாக பேசப்பட்டது. படம் வெற்றி பெறாததால் அடுத்த வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது ஹிந்தி மற்றும் பாஞ்சாபி படங்களில் நடித்து வரும் வாமிகா. மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறார்.
நயன்தாரா நடித்த மாயா படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கும் படம் இறவாக்காலம். இந்தப் படம் மாயா போன்றே ஒரு திகில் படம். இதில் எஸ்.ஜே.சூர்யா, ஷிவதா, வாமிகா இந்த மூவரும் தான் முக்கிய கேரக்டர்கள். மூவரைச் சுற்றித் தான் கதையே நடக்கும். இந்தப் படத்தின் மூலம் மாலை நேரத்து மயக்கத்தில் விட்ட இடத்தை பிடித்து விடலாம் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் வாமிகா. படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் என்.முரளி ராமசாமி தயாரிக்கிறார். 50 சதவிகித படப்பிடிப்புகள் முடிந்திருக்கிறது.