திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் |
கீதாஞ்சலி செல்வராகவன் இயக்கிய மாலை நேரத்து மயக்கம் படத்தில் நடித்தவர் வாமிகா கபி. பாலிவுட்டிலிருந்து அவரை அழைத்து வந்தார் செல்வராகவன். மாலை நேரத்து மயக்கம் படத்தில் அவரது நடிப்பு வெகுவாக பேசப்பட்டது. படம் வெற்றி பெறாததால் அடுத்த வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது ஹிந்தி மற்றும் பாஞ்சாபி படங்களில் நடித்து வரும் வாமிகா. மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறார்.
நயன்தாரா நடித்த மாயா படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கும் படம் இறவாக்காலம். இந்தப் படம் மாயா போன்றே ஒரு திகில் படம். இதில் எஸ்.ஜே.சூர்யா, ஷிவதா, வாமிகா இந்த மூவரும் தான் முக்கிய கேரக்டர்கள். மூவரைச் சுற்றித் தான் கதையே நடக்கும். இந்தப் படத்தின் மூலம் மாலை நேரத்து மயக்கத்தில் விட்ட இடத்தை பிடித்து விடலாம் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் வாமிகா. படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் என்.முரளி ராமசாமி தயாரிக்கிறார். 50 சதவிகித படப்பிடிப்புகள் முடிந்திருக்கிறது.