டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆண்ட்ரியா நடித்துள்ள தரமணி படம் வெளிவந்துள்ளது. இதில் அவர் மதுகுடிக்கும், சீகரெட் பிடிக்கும் நவ நாகரீக பெண்ணாக நடித்துள்ளார். அவரின் துணிச்சலான நடிப்புக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. படத்தில் வரும் கருத்துக்கள் தான் எனது கருத்தும். ஆண்களுக்கு நிகராக பெண்கள் சுதந்திரம் பெற்று வளர்வதால் ஆண்களின் ஈகோ பாதிக்கப்பட்டிருக்கிறது என்கிறார். அவர் மேலும் கூறியதாவது:
இயக்குனர் ராம் உடன் சில சந்திப்புகளிலேயே தரமணி தொடங்கியது. தரமணி படத்தில் எனது கதாபாத்திரம் இவ்வளவு துணிச்சலாக இருக்கும் என முதலில் நான் நினைக்கவில்லை. மக்களின் வரவேற்பையும் கருத்துக்களையும் பார்க்கும்பொழுது, நான் எதிர்பார்த்ததை விட மிக துணிச்சலாக இந்த கதாபாத்திரம் தோன்றுகிறது. எனது சொந்த உடல் மொழியையும் யதார்த்த நடிப்பையும் வெளிப்படுத்த இயக்குனர் ராம் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தார்.
படத்திற்கு மனதளவில் நிறைய உழைப்பு தேவைப்பட்டது. எனது கலை திறமையையும் நேரத்தையும் மதிப்பவர்களோடு பணிபுரிவதே எனக்கு பிடிக்கும், ராம் இவ்விரண்டு அம்சங்களையும் மிகவும் மதிப்பவர். ஒரு படம் பற்றிய அவரது அணுகுமுறையும் மிகவும் யதார்த்தமாக காட்சியமைக்கும் முறையும் எனக்கு பிடித்திருந்தது. நடிகர்களுக்கு எதையும் அறிவுறுத்தி திணிக்காமல் அவர்களுடன் படத்தின் கதை மற்றும் அவர்களது காட்சிகள் பற்றி ஒரு ஆரோக்கியமான விவாதம் நடத்தி படப்பிடிப்பு நடத்துவார்.
பெண்கள் ஆண்களுக்கு எல்லாவிதத்திலும் சமம் என்பது நிரூபணமாகி வரும் காலம் இது. ஆணை போல் ஒரு பெண்ணும், ஒரு வேலைக்கு போய், சம்பாதித்து குடும்பத்தை காப்பாற்ற முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. ஆண்களை சார்ந்து வாழும் நிலை மாறி, பெண்கள் தங்களது அன்றாட தேவைகளை தாங்களே பூர்த்திசெய்து கொள்ளும் அளவிற்கு உயர்ந்துள்ளதால் ஆண்களின் ஈகோ பாதிக்கப்பட்டிருக்கிறது. எனது சொந்த கருத்தத்தை தான் தரமணி பிரதிபலிக்கிறது என்கிறார் ஆண்ட்ரியா.