'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆண்ட்ரியா நடித்துள்ள தரமணி படம் வெளிவந்துள்ளது. இதில் அவர் மதுகுடிக்கும், சீகரெட் பிடிக்கும் நவ நாகரீக பெண்ணாக நடித்துள்ளார். அவரின் துணிச்சலான நடிப்புக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. படத்தில் வரும் கருத்துக்கள் தான் எனது கருத்தும். ஆண்களுக்கு நிகராக பெண்கள் சுதந்திரம் பெற்று வளர்வதால் ஆண்களின் ஈகோ பாதிக்கப்பட்டிருக்கிறது என்கிறார். அவர் மேலும் கூறியதாவது:
இயக்குனர் ராம் உடன் சில சந்திப்புகளிலேயே தரமணி தொடங்கியது. தரமணி படத்தில் எனது கதாபாத்திரம் இவ்வளவு துணிச்சலாக இருக்கும் என முதலில் நான் நினைக்கவில்லை. மக்களின் வரவேற்பையும் கருத்துக்களையும் பார்க்கும்பொழுது, நான் எதிர்பார்த்ததை விட மிக துணிச்சலாக இந்த கதாபாத்திரம் தோன்றுகிறது. எனது சொந்த உடல் மொழியையும் யதார்த்த நடிப்பையும் வெளிப்படுத்த இயக்குனர் ராம் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தார்.
படத்திற்கு மனதளவில் நிறைய உழைப்பு தேவைப்பட்டது. எனது கலை திறமையையும் நேரத்தையும் மதிப்பவர்களோடு பணிபுரிவதே எனக்கு பிடிக்கும், ராம் இவ்விரண்டு அம்சங்களையும் மிகவும் மதிப்பவர். ஒரு படம் பற்றிய அவரது அணுகுமுறையும் மிகவும் யதார்த்தமாக காட்சியமைக்கும் முறையும் எனக்கு பிடித்திருந்தது. நடிகர்களுக்கு எதையும் அறிவுறுத்தி திணிக்காமல் அவர்களுடன் படத்தின் கதை மற்றும் அவர்களது காட்சிகள் பற்றி ஒரு ஆரோக்கியமான விவாதம் நடத்தி படப்பிடிப்பு நடத்துவார்.
பெண்கள் ஆண்களுக்கு எல்லாவிதத்திலும் சமம் என்பது நிரூபணமாகி வரும் காலம் இது. ஆணை போல் ஒரு பெண்ணும், ஒரு வேலைக்கு போய், சம்பாதித்து குடும்பத்தை காப்பாற்ற முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. ஆண்களை சார்ந்து வாழும் நிலை மாறி, பெண்கள் தங்களது அன்றாட தேவைகளை தாங்களே பூர்த்திசெய்து கொள்ளும் அளவிற்கு உயர்ந்துள்ளதால் ஆண்களின் ஈகோ பாதிக்கப்பட்டிருக்கிறது. எனது சொந்த கருத்தத்தை தான் தரமணி பிரதிபலிக்கிறது என்கிறார் ஆண்ட்ரியா.