ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பெரிய இயக்குனர்களின் படங்களில் மட்டுமே பணியாற்றி வந்த ஒளிப்பதிவாளார் பி.சி.ஸ்ரீராம், அறிமுக இயக்குனரின் படமான ரெமோ படத்தில் சிவகார்த்திகேயனுடன் பணியாற்றி ஆச்சர்யத்தை உண்டாக்கினார். இனி திறமையான புதிய இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்றுவேன் என்றும் தெரிவித்தார்.
அதன்படி ஆரண்ய காண்டம் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கும் அநீதி கதைகள் படத்தில் பணியாற்ற ஒப்புக் கொண்டிருந்தார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, பஹத் பாசில், சமந்தா நடிக்கிறார்கள். இதன் முதல்கட்ட படப்பிடிப்புகள் சென்னையில் நடந்தது. பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் குறிப்பிட்ட காலத்தில் திட்டமிட்டபடி தொடங்கப்படவில்லை.
இந்த நிலையில் பி.சி.ஸ்ரீராம் அநீதி கதைகள் படத்திலிருந்து விலகிக் கொண்டிருக்கிறார். அநீதி கதைகள் இரண்டாம்கட்ட படப்பிடிப்புக்காக அவரை அணுகியபோது. அவர் நிவின் பாலி நடிப்பில் ஜெயந்திரா இயக்கும் தெலுங்கு படம் ஒன்றிலும், பேடுமேன் என்ற ஹிந்திப் படத்திலும் பணியாற்ற ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார் என்றும் அந்தப் படங்களின் வேலைகளில் பிசியாக இருக்கிறார் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். வேறு வழியின்றி பி.சி.ஸ்ரீராமுக்கு பதிலாக பி.எஸ்.வினோத்தை ஒளிப்பதிவாளராக்கி உள்ளனர். சரியான திட்டமிடல் இல்லாத படங்களில் பி.சி.ஸ்ரீராம் பணியாற்றுவதில்லை என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கிறது.