பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
இந்திய திரைப்படத் தணிக்கை குழு தலைவராக கடந்த இரண்டு ஆண்டுகளாக பஹ்லால் நிஹ்லனி பணியாற்றி வந்தார். இவர் மீது பல்வேறு புகார்கள் தொடர்ந்து எழுந்து வந்தது. மேலும் உத்த பஞ்சாப், லிப்ஸ்டிக் அண்டர் மை புர்கா, உள்ளிட்ட படங்களுக்கு தணிக்கை சான்றிதழ் வழங்குவதில் அதிக கெடுபிடி காட்டினார். இதனால் பாலிவுட் திரையுலகினர் இவர் மீது கடும் கோபத்தில் இருந்தனர்.
இந்த நிலையில் பஹ்லன் நிஹ்லனி இந்திய தணிக்கை குழு தலைவர் பதவியிலிருந்து திடீரென்று நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக பிரபல பாலிவுட் பாடலாசிரியரும், பாடகருமான பரசூன் ஜோஷியை நியமித்து மத்திய அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
தணிக்கை குழுவின் தலைவர் மாற்றத்தை தொடர்ந்து சென்னை தணிக்கை குழுவிலும் மாற்றம் வரலாம் என்கிறார்கள். நடிகை கவுதமி, இசை அமைப்பாளர் கங்கை அமரன் ஆகியோர் தணிக்கை குழுவில் இடம்பெற வாய்ப்பிருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.