டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
இந்திய திரைப்படத் தணிக்கை குழு தலைவராக கடந்த இரண்டு ஆண்டுகளாக பஹ்லால் நிஹ்லனி பணியாற்றி வந்தார். இவர் மீது பல்வேறு புகார்கள் தொடர்ந்து எழுந்து வந்தது. மேலும் உத்த பஞ்சாப், லிப்ஸ்டிக் அண்டர் மை புர்கா, உள்ளிட்ட படங்களுக்கு தணிக்கை சான்றிதழ் வழங்குவதில் அதிக கெடுபிடி காட்டினார். இதனால் பாலிவுட் திரையுலகினர் இவர் மீது கடும் கோபத்தில் இருந்தனர்.
இந்த நிலையில் பஹ்லன் நிஹ்லனி இந்திய தணிக்கை குழு தலைவர் பதவியிலிருந்து திடீரென்று நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக பிரபல பாலிவுட் பாடலாசிரியரும், பாடகருமான பரசூன் ஜோஷியை நியமித்து மத்திய அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
தணிக்கை குழுவின் தலைவர் மாற்றத்தை தொடர்ந்து சென்னை தணிக்கை குழுவிலும் மாற்றம் வரலாம் என்கிறார்கள். நடிகை கவுதமி, இசை அமைப்பாளர் கங்கை அமரன் ஆகியோர் தணிக்கை குழுவில் இடம்பெற வாய்ப்பிருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.