மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
லிங்குசாமி தயாரித்த ரஜினிமுருகன் படத்தில் நடித்தபோது ஏற்பட்ட கசப்பான அனுபவம் காரணமாக, தொடர்ந்து தனது நண்பர் ராஜா தயாரிக்கும் படங்களில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். முதல் தயாரிப்பாக 'ரெமோ' படத்தைத் தயாரித்த 24 ஏ.எம். ஸ்டுடியோஸ், அடுத்து மோகன்ராஜா இயக்கத்தில் 'வேலைக்காரன்' படத்தையும் ஆரம்பித்தது.
அது மட்டுமல்ல, தொடர்ந்து பொன்ராம், இன்று நேற்று நாளை பட இயக்குநர் ரவிகுமார் ஆகியோரது படங்களில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாகவும் இந்த படங்களையும் 24 ஏ.எம்.ஸ்டுடியோஸ் பட நிறுவனமே தயாரிக்க இருப்பதாகவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
“ஏற்கனவே சிவகார்த்திகேயனுக்கு அட்வான்ஸ் கொடுத்திருப்பதாகவும், எங்களுக்கு கால்ஷீட் கொடுக்காமல் 24 ஏ.எம்.ஸ்டுடியோஸ் நிறுவனத்துக்கு அடுத்தடுத்து படம் பண்ணக் கூடாது” என்று தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில், ஸ்டுடியோக்ரீன் கே.இ.ஞானவேல்ராஜா, எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன், வேந்தர் மூவீஸ் மதன் (சார்பில் டி.சிவா) ஆகிய மூன்று தயாரிப்பாளர்களும், புகார் கொடுத்தனர்.
மூன்று தயாரிப்பாளர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், சிவகார்த்திகேயனை அழைத்து பேசிய தயாரிப்பாளர்கள் சங்கம், மூவருக்கும் கால்ஷீட் கொடுத்து பிரச்சனையை சுமுகமாக முடிக்கும்படி கேட்டுக்கொண்டது. அதற்கு சிவகார்த்திகேயனும் ஒப்புக்கொண்டார்.
இந்நிலையில், 'நானும் ரௌடிதான்' பட இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார் என்ற தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. இந்தப் படத்தையும் 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் நிறுவனமே தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் இப்போது மீண்டும் இந்த பிரச்னை வெடிக்கும் என தெரிகிறது. இதனால் ஆரம்பநிலையிலேயே சிவகார்த்திகேயன் - விக்னேஷ் சிவன் படத்திற்கு முட்டுக்கட்டை ஏற்பட்டிருக்கிறது.