தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
முரசொலி பத்திரிக்கையின் பவள விழாவில் கலந்து கொண்ட கமல்ஹாசன், தற்காப்பை விட தன்மானமே முக்கியம், தேசீய கீதம் உள்ள வரை திராவிடம் இருக்கும் என தெரிவித்தார். அதன்பிறகு தனது டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில் "விம்மாமல், பம்பாமல் ஆவன செய். புரட்சியின் வித்து தனி சிந்தனையே. ஓடி என்னை பின்தள்ளாதே, களைத்தெனைத் தாமதிக்காதே, கூடி நட வெல்வது நானல்ல... நாம்" என்று குறிப்பிட்டிருந்தார்.
இது பலருக்கு புரியவில்லை. அதாவது, "தயங்காமல் புரட்சி செய்ய தயராகுங்குள். அதற்கு தேவை நல்ல சிந்தனை. என்னை தாண்டி ஆர்வக்கோளாறில் ஏதாவது செய்து என்னை களைப்படைய வைக்காதீர்கள். என்னுடன் வாருங்கள் வெற்றி எனக்கு மட்டுமல்ல எல்லோருக்கும். என கமல் அவரது ரசிகர்களுக்கு சொல்வதாக பலரும் கருதினார்கள்.
இந்த டுவிட் வெளியிட்ட சில நிமிடங்களில் அடுத்து ஒரு டுவிட்டடிரை பதிவிட்டிருந்தார் கமல். அதில், "புரிந்தோருக்கும், புரியாதோருக்கும் புகட்டுக. நாட்டுக்கு ஊழியம் செய்வோரை கேலி செய்யாதே, மூப்பெய்தி மாளும் முன், சுதந்திரம் பழகு. தேசியமும் தான்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.