‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
பிரபல நடிகை கடத்தப்பட்டு பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் மலையாள முன்னணி நடிகர் திலீப், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரிடம் போலீஸ் விசாரணை நடத்தி முடித்து விட்டனர். ஏற்கனவே திலீப் தாக்கல் செய்த இரண்டு ஜாமின் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. தற்போது அவர் மூன்றாவது முறையாக கேரள உயர்நீதி மன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:
இந்த வழக்கிற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனக்கு எதிராக மலையாள சினிமா உலகத்தினர் சதி திட்டம் தீட்டியுள்ளனர். இந்த வழக்கில் கைதாகி உள்ள பல்சர் சுனிலை எனக்குத் தெரியாது. நான் சிறையில் இருப்பதால் நான் நடித்த ராம்லீலா உள்பட பல படங்கள் வெளிவராமல் இருக்கிறது. பல படங்கள் பாதியில் நிற்கிறது. இதனால் தயாரிப்பாளர்களுக்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. சக நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களின் வேலை வாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை நான் இல்லாததால் மலையாள சினிமாவுக்கு 50 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.
போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தேன். போலீசும், நீதிமன்றமும், அழைக்கும்போது ஆஜராவேன். எனவே என்னை ஜாமினில் விடுவிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் திலீப் கூறியுள்ளார்.
இந்த மனுவுக்கு 3 வாரத்திற்குள் பதில் அளிக்க எர்ணாகுளம் போலீசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.