'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
முரசொலி நாளிதழின் பவள விழாவில் நடிகர்கள் ரஜினி, கமல் பங்கேற்றனர். முரசொலி நாளிதழின் 75வது ஆண்டு பவள விழா சென்னையில் நடந்தது. காலையில் முரசொலி நாளிதழின் கண்காட்சி துவக்கி வைக்கப்பட்டது. மாலையில் சென்னை, கலைவாணர் அரங்கில் வாழ்த்தரங்கம் நிகழ்ச்சி நடந்தது.
இதில் பங்கேற்க நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி, இருவரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
விழாவில் கமல்ஹாசன் பேசியதாவது... நான் சிறுவனாக இருந்தபோது, இரண்டு குரலுக்கு அடிமையானேன். முதல் குரல், சிவாஜியின் குரல். அவர், பேசும் தமிழுக்கு சொந்தக்காரர் கருணாநிதி என தெரிந்தபோது, அவர் குரலுக்கும் ரசிகனானேன். ரஜினியை போல், நானும் மேடைக்கு கீழே இருந்திருக்கலாம். அது, பாதுகாப்பானதாக இருக்கும். என்றாலும், தற்காப்பை விட, தன்மானம் முக்கியம் என்பதால், பத்திரிகையாளர்கள் கூடி உள்ள சபைக்கு வந்து விட்டேன். திராவிடம் என்பது நாடு தழுவியது. சிந்து சமவெளி நாகரீகம் தொடங்கி தமிழகம் வரை வந்தது திராவிடம். தேசிய கீதத்தில் திராவிடம் என்ற சொல் இருக்கும் திராவிடம் நிலைத்திருக்கும் என்றார்.
விழாவினை திமுக., செயல் தலைவர் ஸ்டாலின் முன்னின்று தலைமை தாங்கினார். விழாவில் பங்கேற்றவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
சமீபகாலமாக நடிகர்கள் ரஜினி மற்றும் கமல் ஆகியோர் அரசியல் சார்ந்த பல்வேறு விஷயங்களை முன்னெடுத்தும் வரும் நிலையில் இருவரும் திமுக., சார்ந்த ஒரு விழாவில் பங்கேற்று இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.