தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சென்னையில் முதல்வர் பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சமத்துவ மக்கள் கட்சி தலைவரும், நடிகருமான சரத்குமார்...
"முதல்வருடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது மட்டுமே. வேறு எந்த காரணமும் இல்லை. அதிமுக.,வில் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். கமல் பற்றி எந்த கருத்தும் கூற விரும்பவில்லை. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்.
ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து அவர் தான் முடிவு செய்ய வேண்டும். அனைவரும் அரசியலுக்கு வந்தால் நன்றாக இருக்கும் என்று தான் நான் கூறுவேன். பெண்களை மரியாதையுடன் நடத்த வேண்டும் என்ற விஜய்யின் கருத்தை நான் வரவேற்கிறேன். நடிகர் சங்கத்திற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 27 ம் தேதிக்கு பிறகு அது பற்றி பேச முடியும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.