அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் |
சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு இரண்டு வேடங்களில் நடித்த படம் இம்சை அரசன் 23ஆம் புலிகேசி. சரித்திர கதையில் உருவான இந்த படம் வடிவேலுவுக்கு பெரிய வெற்றி படமாக அமைந்தது. அந்த படத்தை டைரக்டர் ஷங்கர் தனது எஸ் பிலிம்ஸ் சார்பில் தயாரித்திருந்தார்.
இந்நிலையில், மீண்டும் புலிகேசி-2 படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்குகிறது.
இந்த படத்திற்காக ரஜினியின் 2.ஓ, பிக்பாஸ் நிகழ்ச்சிகளுக்காக செட் போடப்பட்டிருக்கும் சென்னை பூந்தமல்லியை அடுத்துள்ள ஈவிபியில் பிரமாண்ட அரண்மனை செட் போடப்பட்டிருக்கிறது. படத்தின் பெரும் பகுதி படப்பிடிப்பு இந்த செட்டுக்குள்தான் நடைபெறுகிறதாம்.
மேலும், இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்தின் கதையில் இருந்து இந்த இரண்டாம் பாகத்தின் கதையை தொடரவில்லையாம். மாறாக, புலிகேசி கேரக்டரின் தாத்தா காலத்து கதையை இப்போது படமாக்கப்போகிறார்களாம். அந்தவகையில், முந்தைய கதையில் இருந்து 50 வருடத் துக்கு முன்னோக்கி செல்கிறதாம் புலிகேசி-2 படக்கதை. ஆக, பேரன் புலிகேசி இப்போது தாத்தா புலிகேசியாக மாறுகிறாராம்.