தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தின் முதல் பாகம் தமிழில் எடுக்கப்பட்ட ஒரு படம். அந்தப் படத்தைப் பார்த்து என்ன புரிந்து கொண்டார்கள் என்று யாராவது ஐந்து நிமிடங்கள் பேசினால் அவர்களுக்கு தங்கப் பதக்கம் அளித்துப் பாராட்டலாம். தமிழ்த் திரையுலகில் நிறைய சாதித்து விட்டோம் என சிம்பு நினைத்து விட்டாரோ என்னமோ அடுத்த படத்தை ஆங்கிலத்தில் எடுக்கப் போகிறாராம்.
கொஞ்ச நாட்களுக்கு முன்பு தன்னுடைய அடுத்த படத்தில் இடைவேளை இல்லை, பாடல்கள் இல்லை என்ற வித்தியாசமான அறிவிப்பை வெளியிட்டார். இப்போது அந்தப் படம் தமிழிலேயே எடுக்கப்படவில்லை, ஆங்கிலத்தில் எடுக்கப் போகிறோம் என அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறார்.
தன் படத்திற்குக் கவிதை நடையில் தமிழிலேயே பெயர் வைக்கும் இயக்குனர் கௌதம் மேனன், சிம்புவின் ஆங்கிலப் படத்திற்கு வசனம் எழுதப் போகிறாராம். இசைக்கு யுவன்ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவுக்கு சந்தோஷ் சிவன் என முன்னணிக் கலைஞர்கள் ஏற்கெனவே படத்திற்குள் வந்துள்ள நிலையில் புதுவரவு கௌதம் மேனன். அடுத்து இன்னும் யார் யாரெல்லாம் வரப் போகிறார்களோ தெரியவில்லை. அப்படியே 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என்று சொன்னால் அவரின் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்வார்கள்.