மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? |
'பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்களிலும் பல்வால் தேவன் கதாபாத்திரத்தில் தனது கம்பீரமான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தவர் ராணா டகுபட்டி. தற்போது இந்திய சினிமா ரசிகர்களுக்கு மிகவும் தெரிந்த ஒரு நடிகராக மாறிவிட்டார். 'பாகுபலி' படத்திற்குப் பிறகு அந்த படத்தில் நடித்த நட்சத்திரங்களின் படங்களுக்கு இயல்பாகவே ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். அதை ஈடு செய்யும் வகையில் ராணாவும் ஒரு அதிரடியான அரசியல் படத்தில் நடித்துள்ளார். தெலுங்கில் 'நேனே ராஜு நேனே மந்திரி' என்ற அந்தப் படத்தை நீண்ட இடைவெளிக்குப் பிறகு தேஜா இயக்கியுள்ளார்.
இப்படம் தமிழில் 'நான் ஆணையிட்டால்' என்று எம்ஜிஆர் நடித்து வெளிவந்த படத்தின் பெயரில் டப்பிங் ஆகி வெளியாக உள்ளது என்ற அறிவிப்பு வந்த போதே படத்தின் மீதான கவனம் வந்தது. அதோடு படத்தின் டிரைலரிலும் ஒரு கெட்ட வார்த்தை இடம் பெற்று படத்தைப் பற்றிப் பரபரப்பாகப் பேச வைத்தது. சென்னையிலும் இப்படத்தின் பிரமோஷனுக்காக பத்திரிகையாளர்களை ராணா, இயக்குனர் தேஜா ஆகியோர் சந்தித்தார்கள். தமிழ்நாட்டில் தற்போது நிலவும் அரசியல் சூழலுக்கு இந்தப் படம் பொருத்தமாக இருக்கும் என்றார்கள்.
அப்படி ஒரு பரபரப்பைக் கிளப்பியிவர்கள் படத்தை நாளை வெளியிடாமல் தள்ளி வைத்துவிட்டார்கள். தமிழில் நாளை 'வேலையில்லா பட்டதாரி 2, பொதுவாக எம்மனசு தங்கம், தரமணி' ஆகிய படங்களே பெரும்பாலான தியேட்டர்களை எடுத்துக் கொண்டதால் 'நான் ஆணையிட்டால்' படத்தை தெலுங்கில் வெளியிடும் போதே தமிழிலும் வெளியிட முடியவில்லை. அடுத்த வாரம் வெளியிடுவார்களா என்பது பற்றி இதுவரை எந்த அறிவிப்பையும் அவர்கள் வெளியிடவில்லை. 24ம் தேதி 'விவேகம்' வருவதால் 18ம் தேதி வெளியிடுவதும் கொஞ்சம் ரிஸ்க்தான்.