பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் |
தனுஷ், கஜோல், அமலா பால் மற்றும் பலர் நடிக்க, சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள 'வேலையில்லா பட்டதாரி 2' படம் நாளை தமிழில் மட்டும் வெளியாக உள்ளது. இப்படத்தின் தெலுங்கு, ஹிந்தி பதிப்பையும் ஒரே சமயத்தில் வெளியிட வேண்டும் என்பதற்காக தனுஷ், ஐதராபாத், டில்லி, கொச்சி, மலேசியா என பல இடங்களுக்குப் போனார். ஆனால், படத்தை தமிழ்நாட்டில் அவ்வளவாக புரொமோஷன் செய்யவில்லை. இதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.
ஐதராபாத்தில் ஒரு டிவி பேட்டியில் தனுஷிடம் கேட்கப்பட்ட தனிப்பட்ட கேள்விகளுக்கு அவர் கோபித்துக் கொண்டு பேட்டியில் இருந்து சட்டென்று எழுந்து போய்விட்டார். பின்னர் சமாதானமடைந்து வந்து கலந்து கொண்டார். நான் ஏன் அப்படி கோபப்பட்டேன் என்று தெரியவில்லை என டில்லியில் நடந்த நிகழ்வில் ஐதராபாத் டிவி பேட்டி பற்றி வருத்தப்பட்டார்.
வெளிநாடு வரை பறந்து சென்றவர் இங்கு மட்டும் மொத்தமாக சந்திக்காமல் ஒரு சிலரை மட்டும் சந்தித்தார். படக் குழுவினர்களில் மற்றவர்கள் கூட மீடியாவைச் சந்தித்தனர். ஆனால், தனுஷ் அப்படிப்பட்ட ஒரு சந்திப்பைத் தவிர்த்தது ஏன் என்பது குறித்து மீடியா வட்டாரங்களில் கேள்வி எழுந்துள்ளது.