ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கடந்த ஏப்ரல் மாதம் வெளியான 'தி கிரேட் பாதர்' படத்தை தொடர்ந்து தற்போது மம்முட்டி கிட்டத்தட்ட நான்கு படங்களில் நடித்துக் கொண்டு இருக்கிறார். வருகின்ற ஓணம் பண்டிகை முதல் அவை வரிசையாக வெளியாக இருக்கின்றன. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் இதில் மூன்று படங்கள் த்ரில்லர் வகையை சேர்ந்தவை என்பது தான். ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குனராக மாறியுள்ள ஷாம் தத் என்பவர் இயக்கியுள்ள 'ஸ்ட்ரீட் லைட்ஸ்' படம் க்ரைம் த்ரில்லராக உருவாகியுள்ளது. இதில் மம்முட்டி துப்பறியும் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.
அடுத்ததாக மம்முட்டியை வைத்து 'ராஜாதி ராஜா' படத்தை இயக்கிய அஜய் வாசுதேவ் இயக்கத்தில் உருவாகும் 'மாஸ்டர் பீஸ்' படம் கேம்பஸ் த்ரில்லராக உருவாக இருக்கிறது. இதில் படு ஸ்ட்ரிக்ட்டான எட்வின் லிவிங்ஸ்டன் என்கிற காலேஜ் புரபசராக நடிக்கிறார் மம்முட்டி. அடுத்ததாக சரத் சந்தித் என்கிற அறிமுக இயக்குனர் இயக்கத்தில் உருவாகும் 'பரோல்' என்கிற படத்தில் சிறைக்கைதியாக நடிக்கிறார் மம்முட்டி. இது பேமிலி த்ரில்லராக உருவாக இருக்கிறதாம். இதுதவிர 'தி செவன்த் டே' இயக்குனர் ஷ்யாம்தர் டைரக்சனில் மம்முட்டி நடித்து 'புள்ளிக்காரன் ஸ்டாரா' என்கிற படம் மட்டும் இவற்றில் இருந்து மாறுபட்டு ஜாலியான படமாக இருக்குமாம்.