'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தனுஷ் தற்போது ஒரு தயாரிப்பாளராக மலையாள திரையுலகில் நுழைந்து, ஒரே நேரத்தில் இரண்டு திரைப்படங்களை தயாரித்து வருகிறார். 'தரங்கம்', 'மரடோனா' என்கிற இந்த இரண்டு படங்களிலும் மலையாள சினிமாவின் வளர்ந்து வரும் இளம் முன்னணி நடிகரான டொவினோ தாமஸ் நடிக்கிறார்.
இதில் அருண் டொமினிக் என்பவர் இயக்கிவரும் 'தரங்கம்' படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார் சாந்தி பாலசந்திரன். இவர் ஆக்ஸ்போர்டு பல்கலை கழகத்தில் 'மானுடவியல்' தொடர்பான படிப்பில் ஆராய்ச்சி மேற்கொண்டு பட்டம் பெற்றவர்.
இவர் நடித்த 'தி லவர்' என்கிற ஆங்கில் நாடகத்தில் இவரது நடிப்பை பார்த்து தான் இந்தப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு இவரை தேடி வந்ததாம். படத்தின் இயக்குனர் டொமினிக், பெங்களூருவில் இருந்த சாந்திக்கு படத்தின் ஆடிசனின் ஒரு பகுதியாக ஒரு காட்சியை அனுப்பி, அதில் அவரது நடிக்க சொல்லி வீடியோவாக அனுப்ப சொன்னாராம். அதில் ஒகே ஆன அடுத்த நாளே 'நீ தான் ஹீரோயின் என்கிற மெசேஜ் இயக்குனரிடம் இருந்து வந்ததாம்.
இது கிரைம் கலந்த காமெடி படமாக உருவாகியுள்ளது. இந்தப்படத்தில் நானாக எதுவும் காமெடி பண்ணாவிட்டாலும் என்னை வச்சு காமெடி பண்ணியிருக்கிறார்கள் என்கிறார் சாந்தி.