பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கடந்த பிப்ரவரி மாதம் வெளியான 'புக்ரி' படத்தை தொடர்ந்து தற்போதைக்கு நடிகர் ஜெயசூர்யா படம் எதுவும் வெளியாகும் சாத்தியம் தெரியவில்லை. ஆனால் தற்போது கைவசம் மூன்று படங்களை வைத்திருக்கிறார் ஜெயசூர்யா. அவற்றில் 'கேப்டன்' என்கிற படம் கேரளாவின் மறைந்த முன்னாள் புட்பால் விளையாட்டு வீரரான வி.பி.சத்யன் என்பவரது வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி உருவாகிறது. இதில் கேப்டன் ஆக நடிக்கிறார் ஜெயசூர்யா. இந்தப்படத்தின் இயக்குகிறார் பிரஜேஷ் சென். இதுவரை ஜெயசூர்யா நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாக இருக்கும் படம் இதுதானாம்.
மற்ற இரண்டு படங்களுக்கும் ஒரு ஆச்சர்யமான ஒற்றுமை ஒளிந்துள்ளது. இவை இரண்டும் ஏற்கனவே ஜெயசூர்யா நடித்த படங்களின் இரண்டாம் பாகங்களாக உருவாகி இருக்கின்றன என்பதுதான் ஸ்பெஷல். 2013ல் ரஞ்சித் சங்கர் இயக்கத்தில் ஜெயசூர்யா நடித்து ஹிட்டான 'புண்யாலன் அகர்பத்தீஸ்' படத்தின் இரண்டாம் பாகமாக தற்போது 'புண்யாலன் பிரைவேட் லிமிடெட்' என்கிற படம் மீண்டும் இதே கூட்டணியில் உருவாகி வருகிறது.
அதேபோல 2015ல் ஜெயசூர்யா நடிப்பில் வெளியான படம் தான் 'ஆடு ; ஒரு பீகர ஜீவியானு'. மிதுன் மானுவேல் தாமஸ் என்பவர் இயக்கிய இந்தப்படம் வசூல், வரவேற்பு இரண்டிலும் பெரிய அளவில் சோபிக்கவில்லை என்றாலும், இந்தப்படத்தின் இரண்டாம் பாகத்தை 'ஆடு-2' என்கிற பெயரில் படமாக்கி வருகிறார்கள். இந்த மூன்று படங்களும் வரும் அக்டோபரில் இருந்து மாதத்திற்கு ஒரு படம் என ரிலீசாக இருக்கின்றன.