'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
கேரளாவில் நடிகை கடத்தப்பட்டு பாலியல் சித்தரவதைக்கு ஆளான சம்பவத்தை தொடர்ந்து சினிமாவில் உள்ள நடிகைகள் திரையுலகில் உள்ள பல்வேறு அமைப்புகளில் உள்ள பெண்களையும் இணைத்து WCC என்கிற பெண்கள் நல பாதுகாப்பு அமைப்பை துவங்கியுள்ளனர்.
இதன்மூலம் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்யவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு குரல் கொடுக்கவும் அவர்கள் முடிவுசெய்துள்ளனர். இதில் மஞ்சு வாரியார், பார்வதி, ரீமா கல்லிங்கல், ரம்யா நம்பீசன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலர் இணைந்துள்ளனர். ஆனால் ஸ்வேதா மேனன், 'கள்ளபடம்' லட்சுமி ப்ரியா உள்ளிட்ட சிலர் இந்த அமைப்பு தேவையில்லை என கருத்து கூறியுள்ளனர்.
குறிப்பாக துணிச்சலான நடிப்பிற்கு மட்டுமல்லாமல், துணிச்சலான கருத்துக்களை சொல்லவும் தயங்காத ஸ்வேதா மேனன், “எனக்கு இந்த பெண்கள் நல அமைப்பின் உதவி தேவையில்லை.. என் பாதுகாப்பை நானே உறுதி செய்து கொள்வேன்.. தவிர எனக்கு எந்த சமயத்திலும் மலையாள நடிகர் சங்கம் (அம்மா) உறுதுணையாக இருக்கும்” என கூறியுள்ளார்.
அடுத்ததாக வரும் ஓணம் பண்டிகை தொடர்பாக டிவி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கூடாது என நடிகர் சங்கத்தில் இருந்து உத்தரவு வந்துள்ளதாமே என கேட்டால், “அந்த மாதிரி எந்த உத்தரவும் எனக்கு வரவில்லை” என பதில் கூறியுள்ளார் ஸ்வேதா மேனன்.