தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
காதல் கொண்டேன் படத்தின் மூலம் இயக்குநரான செல்வராகவனை ரசிகர்களும், திரையுலகமும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடியது. அந்த வெற்றியை பயன்படுத்திக் கொண்டு தன் கேரியரை உச்சத்துக்குக் கொண்டு சென்றிருக்க வேண்டிய செல்வராகவன், விரைவிலேயே சரிவை சந்தித்தார். செல்வராகவன் கடைசியாக இயக்கிய படம் 'இரண்டாம் உலகம்'. ஆர்யா, அனுஷ்கா நடிப்பில், 2013, நவம்பர் மாதம் வெளியான இரண்டாம் உலகம் படு தோல்வியடைந்தது.
இரண்டாம் உலகம் படத்துக்குப் பிறகு ஏறக்குறைய 4 வருடங்களுக்குப் பிறகு செல்வராகவன் இயக்கியுள்ள படம் நெஞ்சம் மறப்பதில்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் படம் என்பதால் 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் ஒருவித எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. சென்சாருக்கு அனுப்பப்பட்ட நெஞ்சம் மறப்பதில்லை படத்துக்கு 'U/A' சர்டிஃபிக்கெட் வழங்கப்பட்டது.
அதன் பிறகு நெஞ்சம் மறப்பதில்லை படத்தை ஜூன் 2-ஆம் தேதி வெளியிட முடிவு செய்திருந்தனர். என்ன காரணத்தினாலோ படம் வெளியாகவில்லை. இந்த படத்தை தயாரித்துள்ள 'எஸ்கேப் ஆர்டிஸ்ட்' மதன் நெஞ்சம் மறப்பதில்லை படத்தை அடுத்த மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளார்.