ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' |
தமிழில் சூர்யா நடிப்பில் வெளியான சிங்கம், சிங்கம்-2 படங்கள் ஹிந்தியிலும் உருவானது. சூர்யா ரோலில் அஜய் தேவ்கன் நடிக்க ரோகித் ஷெட்டி இயக்கினார். இந்நிலையில் இப்போது சிங்கம்-3 படம் ஹிந்தியில் ரீ-மேக்காக உள்ளது. ஆனால் அஜய்க்கு பதிலாக சன்னி தியோல் நடிக்கிறார், ரோகித்திற்கு பதிலாக ரவி கே சந்திரன் இப்படத்தை இயக்க உள்ளார். இந்நிலையில் விரைவில் சிங்கம்-3 படத்தை இயக்குவேன் என இயக்குநர் ரோகித் ஷெட்டி கூறியிருக்கிறார்.
இதுகுறித்து ரோகித் கூறியிருப்பதாவது... "ரசிகர்கள் என்ன விரும்புகிறார்களோ அது நடக்கும். சிங்கம் படத்திற்கு நிறைய ரசிகர்கள் உண்டு, அதற்கு என்று ஒரு தனி மரியாதையும் உண்டு. சிங்கம்-3 தேவை ஏற்பட்டால் நிச்சயம் சிங்கம்-3 படத்தை உருவாக்குவேன். ரசிகர்களை மகிழ்விக்கவே படங்கள் இயக்குகிறோம், ஆகையால் இதுபோன்ற படங்களை தொடர்ந்து ரசிகர்களுக்கு வழங்குவேன். ஒருவேளை ரசிகர்கள் வேண்டாம் என்று சொல்லிவிட்டால் நிறுத்திவிடுவேன்" என்று கூறியுள்ளார்.
ரோகித்தின் இந்த அறிவிப்பால் பாலிவுட்டில் ஒரு குழப்பமான சூழல் நிலவுகிறது. யார், சிங்கம் 3 படத்தை இயக்கபோகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.