மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் |
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், எமி ஜாக்சன், அக்ஷய் குமார் மற்றும் பலர் நடிக்கும் '2.0' படத்தின் ஆந்திரா, தெலுங்கானா தியேட்டர் உரிமை மிகப் பெரும் விலைக்கு விற்கப்பட்டுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ராஜு மகாலிங்கம் அறிவித்துள்ளார்.
2.0 படம் சுமார் 400 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தின் புரமோஷன் வேலைகளையும், வியாபார வேலைகளையும் ஏற்கெனவே ஆரம்பித்துவிட்டனர். படத்தின் தொலைக்காட்சி உரிமைகளை ஜீ நிறுவனம் 110 கோடி ரூபாய்க்கு ஏற்கெனவே வாங்கிவிட்டது. தற்போது மற்ற வினியோக உரிமைகளின் வியாபாரம் நடைபெற்று வருகிறது.
ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இப்படத்தை வெளியிடும் உரிமையை குளோபல் சினிமாஸ் என்ற நிறுவனம் மிகப் பெரிய விலை கொடுத்து வாங்கியுள்ளது. 'பாகுபலி 2' படத்தின் தமிழ்நாடு வினியோக உரிமை சுமார் 47 கோடிக்கு விற்கப்பட்டது. அதை விட அதிகமாக 2.0 படம் விற்கப்பட்டிருந்தால் அது பெரும் விலைதான்.