மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
முன்பெல்லாம் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்றால், அவற்றை தொகுத்து வழங்கினால் சினிமாவில் தங்களுக்கான இமேஜ் சரிந்துவிடும் என முன்னணி நடிகர்கள் பயந்த காலமும் உண்டு. ஆனால் இன்று சின்னத்திரையின் வீச்சு அதிகமென்பதால் மக்கள் மனதில் இடம்பிடிக்க கூடிய நிகழ்ச்சிகள் மூலம் சின்னத்திரைக்குள் நுழைவதால் இமேஜ் இன்னும் உயரவே செய்யும் என்பதை புரிந்துகொண்டார்கள் சில நடிகர்கள். ஆமீர் கான், சல்மான் கான், சூர்யா, சரத்குமார், சுரேஷ்கோபி ஆகியோர்கள் ரியாலிட்டி ஷோக்கள் மூலமாக சின்னத்திரைக்குள் வந்தது இப்படித்தான்.
தற்போது கடந்த ஒரு மாத காலமாக கமல், 'பிக் பாஸ்' நிகழ்ச்சி மூலமாக சின்னத்திரை ரசிகர்களை தன் வசம் இழுத்துக்கொண்டுள்ளார். இதனால் அவரது மதிப்பு இன்னும் உயரவே செய்துள்ளது என்பது கண்கூடு. அந்தவகையில் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலும் முதன்முதலாக சின்னத்திரைக்குள் அடியெடுத்து வைத்துள்ளார். அம்ரிதா டிவி என்கிற சேனலில் 'லால் சலாம்' என்கிற பொழுதுபோக்கு நிகழ்ச்சியை மோகன்லால் தான் நடத்த இருக்கிறார். விரைவில் துவங்கவுள்ள இந்த நிகழ்ச்சிக்கான லோகோவை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் மோகன்லால்.