சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
பிரபுதேவா, ஹன்சிகா நடித்து வரும் படம் குலேபகாவலி. கே.ஜே.ஆர் ஸ்டூடியோ சார்பில் கொட்டப்பாடி ஜே.ராஜேஷ் தயாரிக்கிறார். எஸ்.கல்யாண் இயக்குகிறார். ரேவதி, ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகான், ராமதாஸ், ”நான்கடவுள்” ராஜேந்திரன், சத்யன், யோகிபாபு நடித்து வருகின்றனர். இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது.
இயக்குனர் கல்யாண் ஒரு பிரம்மாண்டமான பாடல்காட்சியை பாபிலோன் தொங்குதோட்ட பின்னணியில் அமைக்க விரும்பினார். ஆனாலும் அதை வித்தியாசமாக செய்ய நினைத்தார். அதாவது கார்களை கொண்டு அந்த தோட்டத்தை அமைப்பது என்பது திட்டம். கலை இயக்குனர் கதிர், கார்கள் தொங்கும் தோட்டத்தை மினியேச்சர் அமைத்து கொடுத்தார். உடனே தயாரிப்பாளர் ராஜேஷ் அதனை பிரம்மாண்டமாக வடிமைக்க சொன்னார்.
இதற்காக சென்னைக்கு அருகாமையில் உள்ள புறநகரில் பத்து ஏக்கர் நிலத்தில் அரங்கம் அமைக்கப்பட்டது. 500க்கும் மேற்பட்ட தொழிளார்களின் உழைப்பில் 100 விதமான கார்களை கொண்டு தொங்கும் கார்கள் தோட்டத்தை 25 நாட்களில் உருவாக்கினார்கள். இந்த பாடல் இப்படத்தில் பிரபுதேவாவின் அறிமுக பாடல் என்பதால் தெலுங்கு திரை உலகின் முன்னணி நடன இயக்குனர் ஜானியை நடனம் அமைக்க வைத்தால் நன்றாக இருக்குமென்று பிரபு தேவா தயாரிப்பாளரிடம் தன் விருப்பத்தை சொன்னவுடன் உடனே தயாரிப்பாளரும் ஐதராபாத்திலிருந்து நடன இயக்குனர் ஜானியை வர வழைத்தார். ஜானியும் பிரபுதேவாவும் கலந்து ஆலோசித்து நடன அமைப்பில் பல புதுமையான வித்தைகளை புகுத்தினர்.
இப்பாடலுக்காக பத்து நாட்களுக்கு முன்பே மும்பை, பெங்களூர், ஐதராபாத் மற்றும் சென்னையை சேர்ந்த 400க்கும் மேற்பட்ட நடன கலைஞர்களை சென்னைக்கு வரவழைத்து நடன ஒத்திக்கை அளிக்கப்பட்டது. ஆனந்த குமாரின் ஒளிப்பதிவில் படமாக்கப்பட்ட இப்பாடல் படத்திற்கு ஹைலைட்டான விஷயமாக இருக்கும் என்கிறார்கள்.