பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தனுஷ் நடிப்பில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் வி.ஐ.பி-2 வரும் வெள்ளியன்று வெளியாக இருக்கிறது. இந்தப்படம் மலையாளம் மொழியிலும் வெளியாகிறது. கேரள வெளியீட்டு உரிமையை மோகன்லாலுக்கு சொந்தமான ஆசீர்வாத் சினிமாஸ் கைப்பற்றியுள்ளது. இதனால் இந்தப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள நேற்று தனுஷ், அமலாபால், இயக்குனர் சௌந்தர்யா மூவரும் கொச்சிக்கு விசிட் அடித்தனர்.
தமிழ் ரசிகர்களை விட மலையாள ரசிகர்கள் தனுஷை மிகுந்த ஆரவாரத்துடன் வரவேற்றதை பார்க்க முடிந்தது. இந்த நிகழ்வில் தனுஷ் கலந்து கொள்வதை கேள்விப்பட்டு பாலக்காட்டில் இருந்து 55 ரசிகர்கள் தனுஷை பார்க்க கிளம்பி வந்திருந்தனர். அவர்களுக்கு தனது நன்றியை தெரிவித்த தனுஷ், அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார். கொச்சியில் நடைபெற்ற இந்த புரமோஷன் நிகழ்ச்சியை ஆசீர்வாத் சினிமாஸ் சார்பாக மோகன்லாலின் நண்பரான ஆண்டனி பெரும்பாவூர் ஏற்பாடு செய்திருந்தார்.