இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ஜிஎஸ்டி.,யால் தமிழ் சினிமாவுக்கு வசூல் பாதிப்பு இல்லை என்கிறார் தமிழ் சினிமா சேம்பர் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன்.
நாடுமுழுவதும் ஒரே வரி என்ற அடிப்படையில் ஜூலை முதல் ஜிஎஸ்டி அமலுக்கு வந்துள்ளது. இதில் சினிமா டிக்கெட்டுகளுக்கு 18 மற்றும் 28 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டிருக்கிறது. இதை ஆரம்பத்தில் திரைத்துறையினர் எதிர்த்தாலும் பின்னர் ஏற்று கொண்டனர். அதேசமயம் மாநில அரசின் 30 சதவீதம் வரிக்கு மட்டும் எதிர்ப்பு தெரிவித்து 4 நாட்கள் ஸ்டிரைக் நடத்தினர். இப்போது இதுதொடர்பான பேச்சுவார்த்தை அரசுடன் நடந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில், சென்னை நந்தம்பாக்கம் தொழில் வர்த்தக வளாகத்தில் "பிக் சினி எக்ஸ்போ" கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த கண்காட்சியை அபிராமி ராமநாதன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். தமிழகத்தில் திரையரங்குகள் மாறுதல் மற்றும் நவீனப்படுத்துவது எப்படி என்பது பற்றி எடுத்துரைக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அபிராமி ராமநாதன்... "GST, கேளிக்கை வரி விதிப்பால் தியேட்டர் தொழில் நலிவடைந்து விடும் என்ற அச்சம் இருந்தது, இப்போது இல்லை. திரையரங்குகள் நவீனப்படுத்தி நல்ல சினிமாக்கள், மக்கள் ரசிக்க கூடிய படங்களை திரையிட்டால் வசூல் குவியும், எந்த வரி விதிப்பும் தொழிலை பாதிக்காது என்பதை சமீபத்தில் வெளியான படங்களின் வசூல் உறுதிப்படுத்தியுள்ளது.
இன்னும் சில தினங்களில் கேளிக்கை வரி சம்பந்தமாக நல்லதொரு அறிவிப்பை எதிர்பார்க்கலாம். தமிழ் சினிமா தயாரிப்பு துறைக்கு பிரதான வருவாய் ஈட்டி தரக் கூடிய தியேட்டர்களை பற்றி கவலைப்பட்டு அதற்காக சிறப்பு கண்காட்சியை நடத்திய தியேட்டர் வேர்ல்டு நிறுவன உரிமையாளர் ராகவ்விற்கு பாராட்டுக்கள்.
தமிழகத்தில் தியேட்டர்களை நவீனப்படுத்தி சினிமா பார்க்க வரும் ரசிகனுக்கு புதுமையான அனுபவத்தை கொடுக்க திரையரங்கு உரிமையாளர்கள் முயற்சிப்பார்கள் என்றார் அபிராமி ராமநாதன்.
இந்த நிகழ்ச்சியில் அபிராமி ராமநாதன், கியூப் நிறுவன உரிமையாளர் செந்தில், தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க இணை செயலாளர் திருச்சி ஸ்ரீதர், திரையரங்குகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல கலந்து கொண்டனர்.