டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தனுஷ் நடித்துள்ள விஐபி-2 படம் இந்த மாதம் 11-ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகவிருக்கிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் ஒரேநாளில் வெளியிட திட்டமிட்டனர். ஆனால் இப்போது தெலுங்கு, ஹிந்தி ரிலீஸ் தேதி ஒருவாரம் தள்ளிப்போய் உள்ளது.
விஐபி-2 படத்தை மலேசியாவில் கணிசமான தியேட்டர்களில் திரையிட உள்ளனர். இதுவரை எந்த ஒரு தமிழ் படமும் மலேசியாவில் இவ்வளவு தியேட்டர்களில் வெளியாகவில்லையாம். அதனால்தான் தனுஷ், கஜோல் உள்ளிட்ட படக்குழுவினர் அண்மையில் மலேசியா சென்று புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.
இதனிடையே விஐபி-2 படத்தின் கேரள விநியோக உரிமையை மாக்ஸ் லேப் மற்றும் ஆசீர்வாத் சினிமாஸ் நிறுவனங்கள் இணைந்து வாங்கியுள்ளன. இந்த நிறுவனங்கள் நடிகர் மோகன்லால் மற்றும் அவரது மானேஜர் பெரும்பாவூர் ஆண்டனியுடையது என்பது குறிப்பிடத்தக்கது.
ரஜினியின் கபாலி படத்தை கேரளாவில் இந்த நிறுவனங்கள் தான் வெளியிட்டன. கபாலியைத் தொடர்ந்து இந்த நிறுவனம் வெளியிடும் தமிழ்ப்படம் விஐபி-2 படம்தான். இந்த படத்தை கேரளாவில் 200-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியிடவிருக்கின்றனர்.