ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஜேஎஸ்கே., பிலிம் கார்பரேஷன்ஸ் தயாரிப்பில், புதுமுகம் வசந்த் ரவி, ஆண்ட்ரியாவின் நடிப்பில், யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் உருவாகியுள்ள படம் "தரமணி". ஆண், பெண் உறவு முறை பற்றியும், காதல் பற்றியும், இன்றைக்கு உள்ள கலாச்சாரம் பற்றியும் பேசும் படமாக உருவாகி உள்ளது. நீண்ட போராட்டத்திற்கு பிறகு தரமணி படம் வருகிற ஆகஸ்ட் 11-ம் தேதி ரிலீஸாக உள்ளது.
இது குறித்து இயக்குனர் ராம் பேசுகையில், அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவன் நான். எனது சுற்றுப்புறத்தில் வசிக்கும் இளைஞர்கள், அவர்களது வாழ்க்கை முறை மற்றும் அவர்களது கலாச்சாரம் ஆகியவற்றில் நான் கண்ட விஷயங்களின் எனது புரிதலிலும் கண்ணோட்டத்திலும் உருவாகிய கதை தான் தரமணி.
உலகமயமாக்கத்தால் தமிழ் பெண்களுக்கு மேலும் சுதந்திரமும், தன்னம்பிக்கையும் கிடைத்திருக்கிறது. நவீன சிந்தனைகளுக்கும் பழமைவாத சிந்தனைகளுக்கும் இடையே சிக்கிக் கொண்டு தவிக்கும் தற்போதய ஆண் வர்கம், தங்கள் காதலி அல்லது மனைவியை புரிந்து கொள்வதில் சந்திக்கும் சிரமங்கள் பற்றி தரமணி படத்தில் பேசியுள்ளேன்.
இது தகவல் தொழில்நுட்ப ஊழியர்களின் வாழ்க்கை முறையை பற்றிய படம் மட்டுமே என்பது உண்மையல்ல. தரமணி பல கலாச்சாரம், பல்வேறு பின்னையிலிருந்து சென்னைக்கு வந்து வாழும் இளைஞர்கள் பற்றிய பொதுவான படம். எல்லா இளைஞர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் படமாக தரமணி இருக்கும் என்கிறார்.