தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நாடு முழுவதும் நேற்று ரக்ஷா பந்தன் பண்டிகையைக் கொண்டாடினார்கள். பெண்கள் அவர்களது சொந்த சகோதரர்களுக்கோ, அல்லது அவர்கள் சகோதரர்களாக ஏற்றுக் கொண்டவர்களுக்கோ கையில் ராக்கி கயிறு கட்டி அவர்களின் அன்பைப் பெறும் பண்டிகையாகும். வட இந்தியாவில் முக்கியமான பண்டிகையான இதை தற்போது தென்னிந்தியாவிலும் கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள். முக்கியமாக அலுவலகங்களில் அதிகம் காணலாம்.
பல பிரபலங்களும் நேற்று அவர்களது சகோதரர்களுக்கு ராக்கி கயிறு கட்டி ரக்ஷா பந்தனைக் கொண்டாடினார்கள். சமூக வலைத்தளங்கள் முழுவதும் பிரபலங்களின் ரக்ஷா பந்தன் புகைப்படங்கள் நிறைந்து காணப்பட்டது. தமிழ் சினிமாவின் அடுத்த சிம்ரன் என வர்ணிக்கப்பட்ட நடிகை சாயிஷா நேற்று ரக்ஷா பந்தனை இயக்குனர் விஜய்யுடன் கொண்டாடினார்.
விஜய் இயக்கிய 'வன மகன்' படத்தில்தான் சாயிஷா நாயகியாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. “இனிய ரக்ஷா பந்தன், இன்றைய நாள் முழுவதையும் என்னுடைய அற்புதமான சகோதரர் விஜய்யுடன் கழித்தேன், அந்த மகிழ்ச்சியை அனுபவித்தேன்,” எனக் குறிப்பிட்டு புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
திரையுலகில் அண்ணன், தங்கை பாசம் என்பது அபூர்வமானது தான். பல காதல் கிசுகிசு நடசத்திரங்களுக்கு மத்தியில் ஒரு அண்ணன், தங்கை பாசத்தை நேற்று பார்த்தது ஆச்சரியமானது தான்.