மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? |
மாவீரன் கிட்டு படத்திற்கு பிறகு சிலுக்குவார் பட்டி சிங்கம், கதாநாயகன், பொன் ஒன்று கண்டேன், ராட்ஸசன் என பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார் விஷ்ணு விஷால். இதில் சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தில் கடந்த சில மாதங்களாக நடித்து வந்தவர், தற்போது அப்படத்தில் நடித்து முடித்து விட்டார். அடுத்தபடியாக ராட்ஸசன் படத்தில் நடிக்க தயாராகிக்கொண்டிருக்கிறார்.
மேலும், இதற்கு முன்பு குள்ளநரிக்கூட்டம் படத்தில் போலீஸ் ஆவதை லட்சியமாகக் கொண்ட கதையில் நடித்தவர், கடைசியில் அந்த படத்தில் போலீசாகி விடுவார். அதையடுத்து தற்போது சிலுக்குவார்ட்டி சிங்கம் படத்தில்போலீசாக நடித்துள்ளார் விஷ்ணு விஷால். இந்த படம் காமெடி கதையில் உருவாகியிருக்கிறது. இதையடுத்து ராட்ஸசன் படத்தில் இன்ஸ்பெக்டராக நடிக்கிறாராம் அவர். போலீஸ் வேடத்தில் நடிக்கும் ஒவ்வொரு படங்களிலும் படிப்படியாக பிரமோஷன் ஆகிக்கொண்டே வருகிறார் விஷ்ணுவிஷால்.