இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
கேரளாவில், நடிகை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மலையாள நடிகர் திலீப்பிற்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரால் நிற்க கூட முடியவில்லை என்று கூறப்படுகிறது.
வெர்டைகோ பாதிப்பு
கேரளாவில் உள்ள ஆலுவா கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ள திலீப்பிற்கு, வெர்டைகோ எனப்படும் காதுகளின் உட்பகுதியில் உள்ள திரவத்தில் நிலையற்ற தன்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், கிறுகிறுப்பு, தலை சுற்றல், நிற்க கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவரது உடல்நிலையை பரிசோதனை செய்ய வந்த டாக்டர்கள் இதை கண்டுபிடித்துள்ளனர். அவருக்கு போதிய மருத்துவ வசதி அளித்தும் உடல் நலம் சீராகவில்லை என்றே கூறப்படுகிறது.
வெறும் தரையில் பல நாட்கள் படுத்ததாலும் அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவரை மருத்துவமனையில் சேர்ப்பது குறித்து சிறை கண்காணிப்பாளர் ஆலோசித்தாலும், பாதுகாப்பு காரணங்களால் கைவிடப்பட்டது. நடிகர் திலீப்பின் நீதிமன்ற காவல் நாளை முடிவடைகிறது. அவரது சார்பில் ஆஜராக உள்ள புதிய வழக்கறிஞர் ராமன் பிள்ள, ஜாமின் கேட்டு மீண்டும் மனு தாக்கல் செய்வார் என்று கூறப்படுகிறது.