'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சமூக ஊடகங்களில் சினிமா நட்சத்திரங்களின் பெயரில் போலியான அக்கவுண்டுகள் நிறைய உலா வருகின்றன. அதன் மூலம் போலியான தகவல்களும் பரபரப்படுகின்றன. இதுதொடர்பாக அவ்வப்போது சம்பந்தப்பட்ட நட்சத்திரங்கள் சைபர் கிரைம் போலீஸை அணுகுவது உண்டு. இப்போது அப்படி ஒரு பிரச்னையை நடிகர் சிம்பு சந்தித்து இருக்கிறார்.
சமீபத்தில் நடிகர் சிம்பு, பிக்பாஸில் பங்கேற்ற ஓவியாவிற்கு வெளிப்படையாக தனது ஆதரவை டுவிட்டரில் தெரிவித்து இருந்தார். இதை சாதகமாக பயன்படுத்தி சிம்புவின் போலியான டுவிட்டரில், சிம்பு, ஓவியாவை திருமணம் செய்ய தயார் என்பது போன்று தகவல் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த விஷயம் சிம்புவின் காதுகளுக்கு எட்ட கோபமானதோடு, தன்னிலை விளக்கமும் கொடுத்திருக்கிறார். அதில்,
எனது பெயரை களங்கப்படுத்த சிலர் துடிக்கின்றனர் என்ற செய்தி எனக்கொன்றும் புதிதல்ல. இவற்றையெல்லாம் மீறி வெற்றி காண்பவன் நான். ஆனால் நான் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒரு நடிகையை பற்றி தனிப்பட்ட டுவீட் ஒன்றை போட்டேன் என்பது முற்றிலும் பொய்யான, உண்மைக்கு மாறான, எனது மனதை புண்பட வைக்கும் செய்தி.
பொறுப்பற்ற சிலர் எனது பெயரில் போலியான சமூக ஊடக அக்கவுண்ட் மூலம் இது போன்று டுவீட் செய்வது எனக்கு ஆச்சிரியமளிக்கவில்லை, அனால் இந்த உண்மையற்ற, போலியான செய்தியை சில ஊடகங்கள் நம்பி, அதனை வெளியிடுவது எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. எந்த ஒரு ஊடகத்துக்கும் உண்மையான செய்தியை பொறுப்புடன் தருவதே முதன்மை காரியமாக இருக்க வேண்டும் என்பதை நம்புபவன் நான்.
இது போல் என் பெயரால் போலியாக உருவாக்கப்பட்டுள்ள அக்கவுன்ட்டால் பரப்பப்படும் செய்திகளை நம்ப வேண்டாம் என்றும், எனது தரப்பிலிருந்து அதிகாரபூர்வமாக வரும் அறிவிப்புகளை மட்டுமே வெளியிடுமாறு அனைத்து ஊடக நண்பர்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு சிம்பு கூறியுள்ளார்.