டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருப்பவர் காஜல் அகர்வால். பெரிய நாயகர்களுடன் பெரிய படங்களில் மட்டுமே நடிப்பார். தமிழில் கடைசியாக, ஜீவாவுடன் காஜல் அகர்வால் நடித்த 'கவலை வேண்டாம்' படம் தோல்வியடைந்தது.
அந்தப் படத்தில் முதலில் கீர்த்தி சுரேஷ் தான் நடிக்க ஒப்பந்தமானார். ஜீவா குடும்பத்தினர் தயாரித்த 'ஜில்லா' படத்தில் விஜய் ஜோடியாக நடித்ததால், அந்த நட்பில் ஜீவா படத்தில் நடிக்க சம்மதித்தார். கடைசியில் 'கவலை வேண்டாம்' படம் அவருக்கு வாரிவிட்டது.
அதனால், நடித்தால் இனி பெரிய ஹீரோக்களுடன் மட்டுமே என முடிவெடுத்து தற்போது அஜித்துடன் 'விவேகம்' படத்தில் நடித்து முடித்துள்ளார். விஜய்யுடன் 'மெர்சல்' படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் 'பாகுபலி' வில்லன் ராணா டகுபட்டி நாயகனாக நடிக்கும் 'நேனே ராஜு நேனே மந்திரி' படத்திலும் நடித்து முடித்துள்ளார்.
'நேனே ராஜு நேனே மந்திரி' படம் வரும் 11ம் தேதி வெளியாகிறது. 'பாகுபலி 2' படத்திற்குப் பிறகு ராணா டகுபட்டி நடித்து வெளிவரும் படம் என்பதாலும், முழுக்க முழுக்க அரசியல் படம் என்பதாலும் இப்படத்திற்கு ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.
தமிழிலும் 'நான் ஆணையிட்டால்' என்ற பெயரில் டப்பிங் செய்து வெளியிட உள்ளார்கள். 11ம் தேதி இந்தப் படத்திற்காகக் காத்திருக்கும் காஜல், 24ம் தேதி தமிழில் வெளியாகும் 'விவேகம்' படத்திற்காகவும் காத்திருக்கிறார். அஜித் ஜோடியாக முதல் முறையாக காஜல் நடித்திருக்கும் படம் இது. ஒரே மாதத்தில் இரு மொழிகளில், இரண்டு பெரிய படங்கள் என இந்த மாதத்தில் அசத்தப் போகிறார் காஜல் அகர்வால் மட்டுமே.