'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் |
தென்னிந்தியர்களுக்கு சுயமரியாதை எப்போதும் அதிகம் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 40 நாட்களை கடந்து ஓடி வருகிறது. நேற்றைய நிகழ்ச்சியில் ஜூலி போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார். அதற்கு முன்பாக கமல், போட்டியாளர்கள் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக கலந்துரையாடினார். அப்போது காயத்ரி ரகுராமிடம் பேசும்போது சில பொதுவான விஷயங்களையும் முன் வைத்தார். அதில் கமல் பேசியதாவது...
மும்பையில் பிரபலமான நிகழ்ச்சியாக இருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி, 10 சீசனை தாண்டி ஓடுகிறது. அந்த நிகழ்ச்சி விந்திய மலை தாண்டி இங்கு வரும்போது அதை அணுக வேண்டிய முறை வேறு விதமாக இருக்க வேண்டும். அதனால் அது வேறு இந்தியா, அது வேறு இந்தியா என்று சொல்லவில்லை, இங்குள்ளவர்களுக்கு சுயமரியாதை ஜாஸ்தி. அப்படிப்பட்ட இந்த இந்தியாவில் எதை எப்படி ஒளிப்பரப்ப(விஜய் டிவி) வேண்டும் என்று தெரிந்திருந்து வைத்திருக்க வேண்டும். மக்களின் கோபமாக மாறுவதற்கு முன்னர் அதை திருத்தி கொள்ள வேண்டும். அதற்காக கோபமே படக்கூடாது, நகைச்சுவையாக பேசக்கூடாது என்று கூறவில்லை.
தமிழர்களுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம், அதேசமயம் அவர்கள் இழிச்சவாயர்களும் இல்லை. பலவித போராட்டத்திற்கு குரல் கொடுத்த முனை இந்த முனை, அதை யாரும் மறந்து விடக்கூடாது. யாராவது கேஸ் போட்டு விடுவார்கள் என்ற காரணத்திற்காக, ஏதோ பயத்தில் சொல்கிறேன் என்று நினைக்க வேண்டும். அதுவேறு, அதை பார்க்க வக்கில்கள் இருக்கிறார்கள். இது சுயமரியாதை சம்பந்தப்பட்ட விஷயம், தமிழனின் பெருமை பேசும் விஷயம். இதை நான் அறிவுரையாக சொல்லவில்லை, மக்களிடமிருந்து பெரும் கருத்தை இந்த தொலைக்காட்சியில் உள்ளவர்களுக்கு வைக்கிறேன்.
இவ்வாறு கமல் பேசினார்.