'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழில் ஒளிப்பரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகி 40 நாட்களை கடந்து விட்டது. நிகழ்ச்சி ஆரம்பமான முதலே பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வந்தாலும், அந்த சர்ச்சைகளே நிகழ்ச்சிக்கு பிளஸாக அமைய, இப்போது அதுவே தமிழகத்தில் பிக்பாஸ் பீவராக மாறிவிட்டது.
அதிலும் ஓவியா - ஜூலி பிரச்னையில் பரபரப்பான இந்த நிகழ்ச்சி, தொடர்ந்து ஓவியா - ஆரவ் காதல் விவகாரம், ஓவியா தற்கொலை முயற்சி, ஓவியா மன ரீதியாக பாதிக்கப்பட்டது, நிகழ்ச்சியிலிருந்து அவர் வெளியேற்றம் என நிகழ்ச்சியின் பரபரப்பை குறையவிடாமல் எகிற வைத்தது பிக்பாஸ்.
கடந்து போன சனி, ஞாயிறு பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா, ஜூலி இருவரும் வெளியேறினர். அதேசமயம் போட்டியாளர்கள் ஒவ்வொருவரையும், தனியாக அழைத்து பேசி அவர்கள் செய்த தவறுகளை சுட்டிக்காட்டி அவர்களுக்கு பாடம் புகட்டினார் கமல்.
இந்நிலையில் ஏற்கனவே சமூக வலைதளங்களில் ஓவியாவுக்கு ஆதரவும், ஜூலிக்கும் எதிர்ப்பும் கிளம்பிய நிலையில், ஓவியா, ஜூலி இருவரும் வெளியில் நடமாட தொடங்கியுள்ளனர். இவர்களில் ஓவியா சமீபத்தில் ஷாப்பிங் மால் ஒன்றுக்கு சென்றார். அங்கு அவரை சூழ்ந்து கொண்ட ரசிகர்கள், அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். ஓவியாவும் ரசிகர்களின் அன்பில் முகமலர்ச்சியுடன் காணப்படுகிறார்.
அதேசமயம் ஜூலியோ முகத்தை மூடியபடி வெளியில் நடமாடுகிறார். நேற்று டிஎன்பில்., நடக்கும் போட்டிக்கு முகத்தை மறைத்தபடி வந்த ஜூலி, பிக்பாஸ் போட்டியில் பங்கேற்ற போட்டியாளர்களில் ஒருவரான பரணியிடம் காலில் விழுந்து மன்னிப்பு கோரினார். பரணியும், ஜூலியை பெருந்தன்மையாக மன்னித்து வழியணிப்பி வைத்தார். தொடர்ந்து ஜூலி, தன் தோழி ஒருவருடன் முகத்தை மறைத்தபடி பைக்கில் பறந்தார்.
தற்போது இந்த இரண்டு நிகழ்வுகளையும் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் டிரெண்ட்டாகி வருகின்றனர்.