ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பிரபல பாலிவுட் இயக்குனரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹர், வாடகை தாய் மூலமாக கடந்த பிப்ரவரி மாதம், ஆண், பெண் என ஒரே சமயத்தில் இரட்டை குழந்தைகளுக்கு தந்தையானார். அவற்றிற்கு யாஷ் மற்றும் ரூஹி என பெயர் வைத்துள்ளார். ஒன்றுக்கு இரண்டாக குழந்தைகள் பிறந்ததில் இருந்து தனது உலகமே மாறிவிட்டது போல சந்தோஷத்தில் திளைக்கும் கரண் ஜோஹரின் மனதில் புதிதாக தற்போது வித்தியாசமான ஒரு கவலை குடியேறியுள்ளது.
அது வேறொன்றுமில்லை.. தனது இரண்டு குழந்தைகளும் வாய்திறந்து பேச ஆரம்பிக்கும்போது எங்கே இந்திக்கு பதிலாக மலையாளத்தில் தான் பேசுவார்களோ என்பதுதான் அந்த கவலை.. காரணம்.. இந்த இரண்டு குழந்தைகளையும் கவனித்துக்கொள்ள கேரளாவில் இருந்து நான்கு நர்ஸ்களை பணியமர்த்தி இருக்கிறார் கரண் ஜோஹர். அதனால் குழந்தைகள் தங்கள் பெற்றோரின் மொழியான ஹிந்தியை கேட்பதைவிட, அதிக நேரம் உடன் இருக்கும் நர்ஸ்கள் பேசும் மலையாள வார்த்தைகளைத்தானே உள்வாங்குவார்கள்.. அதுதான் இப்போது கரண் ஜோஹருக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. அதனால் நேரம் கிடைக்கும்போதெல்லாம் குழந்தைகளின் காதில் “பப்பா.. பப்பா” என சொல்லி கொஞ்சி வருகிறாராம்..