'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் |
பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகி 40 நாட்களையும், 6 வாரங்களையும் கடந்துள்ளது. இத்தனை நாட்களாக இல்லாத ஒரு பரபரப்பு கடந்த வாரம் நிலவியது. நிகழ்ச்சியில் இதுவரை பலருக்கும் சண்டை இருந்தாலும், கடந்த வாரம் ஓவியா - ஆரவ் காதல் விவகாரத்தால், ஓவியா தற்கொலைக்கு முயற்சி செய்தார் என்பது பரபரப்பை ஏற்படுத்தியது.
அதைத் தொடர்ந்து உடல்நலம் காரணமாக நிகழ்ச்சியை விட்டு ஓவியா வெளியேறினார். ஒவ்வொரு வாரமும் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டுமே நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் கமல்ஹாசன் வந்து, போட்டியாளர்களைப் பார்த்து கேள்விகள் கேட்டு, நிகழ்ச்சியை விட்டு வெளியேறுபவருடன் பேசவும் செய்வார்.
இத்தனை வாரங்களாக கமல்ஹாசன் பற்றி யாரும் அவ்வளவாக நெகட்டிவ்வாக கமெண்ட்டுகளை சொன்னதில்லை. ஆனால், கடந்த வாரம் போட்டியாளர்களின் தவறுகளை கறாராக கமல்ஹாசன் சுட்டிக் காட்டுவதில்லை என்ற கமெண்ட்டுகள் சமூக வலைத்தளங்களில் அதிகமாக எழுந்தது. அதனால், நேற்றும், நேற்று முன்தினமும் கமல்ஹாசன் நிகழ்ச்சியை எப்படி வழங்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
அனைத்து கமெண்ட்டுகளுக்கும் பதிலடி கொடுக்கும் விதமாக கடந்த இரண்டு நாள் நிகழ்ச்சியிலும் கமல்ஹாசனின் ஆளுமையை நிகழ்ச்சியில் பார்க்க முடிந்தது. ஒவ்வொரு போட்டியாளரிடமும தனித் தனியாக உரையாடி அவர்களுடைய தவறுகளை அவருக்கே உரிய பாணியில் நேருக்கு நேர் சுட்டியும், கொட்டியும் காட்டினார். நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய ஓவியா, வெளியேற்றப்பட்ட ஜுலி ஆகியோரிடம் அவர்களது நிலைமை என்ன என்பதை சரியாகச் சொல்லி புரிய வைத்து, அவர்களுக்குத் தொடர்ந்து ஆதரவு கொடுப்பேன் என்றும் தெரிவித்தார்.
கமல்ஹாசன் சொன்ன குறைகளை போட்டியில் இருக்கும் மற்றவர்கள் திருத்திக் கொள்வார்களா என்று எதிர்பார்த்த நிலையில் இன்று காலையில் வெளியான இன்றைய புரோமோவில் “என்னைத் திருத்த என் அம்மாவிற்கு மட்டுமே உரிமை உள்ளது. கமல்ஹாசன் பேசறது எனக்கு டிஸ்கரேஜ்மென்ட்டா இருக்கு,” எனப் பேசி விமர்சனம் செய்கிறார் காயத்திரி ரகுராம்.
இத்தனை நாள் ஓவியாவைப் பற்றி கண்டிபடி பேசியவர்கள், இன்று கமல்ஹானையே கண்டபடி பேசுவார்களோ என அதிர்ச்சியடைய வைத்துள்ளார்கள்.