சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் | பிரபல இயக்குனரின் வீட்டில் திருடப்பட்ட நகைகள் ஒரேநாளில் மீட்பு | ரஜினி 171 தலைப்பு 'கூலி' - 'ரெட்ரோ' லுக்கில் அசத்தும் ரஜினிகாந்த் | 3வது திருமணநாளை கொண்டாடிய விஷ்ணு விஷால் | கீர்த்தி சுரேஷிற்கு திருமணமா? | வருத்தத்தில் ஜாக்குலின் |
கைதி எண்-150 படத்தை அடுத்து ஆந்திராவைச்சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகியான உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாறு கதையில் நடிக்கிறார் சிரஞ்சீவி. இந்த படத்தை அவரது மகனும், நடிகருமான ராம்சரண் தயாரிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் தயாராகும் இப்படத்தில் நடிக்க சில இந்திய பிரபலங்களிடம் பேச்சுவார்த்தை நடந்து வந்தது.
இந்நிலையில், தற்போது அப்படத்தில் சிரஞ்சீவியுடன் ஒரு முக்கிய வேடத்தில் அமிதாப்பச்சனும், நாயகியாக நயன்தாராவும் நடிப்பது உறுதியாகியுள்ளது. அதையடுத்து வில்லனாக நடிக்க சில நடிகர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வந்த நிலையில், கன்னட சூப்பர் ஸ்டாரான நான் ஈ சுதீப் தற்போது கமிட்டாகியிருக்கிறார். ஏற்கனவே நான் ஈ படத்தில் நடித்து தெலுங்கு ரசிகர்களை கவர்ந்த சுதீப், இந்த படம் மூலம் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் இன்னும் பெரிய அளவில் ரிச்சாகி விடுவார் என்று கூறப்படுகிறது.